"சோதனைச் சாவடியில் குண்டு வெடிக்கும்.. 100 பேரின் உயிர் போகும்" பார்டர் தாண்டி போன மிரட்டல்..

x

திருப்பதி சோதனைச் சாவடியில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த, சேலத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனைச் சாவடியில் குண்டு வெடித்து 100 பேராவது உயிரிழப்பர் என, கடந்த 15ஆம் தேதி தொலைபேசி முலம் மிரட்டல் வந்த‌து. இதையடுத்து சோதனை செய்த போது வெடிகுண்டுகள் ஏதும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மிரட்டல் அழைப்பு சேலத்தை சேர்ந்த, தனியார் வங்கி ஊழியரான பாலாஜி என்பவரின் தொலைபேசியில் இருந்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்