முதல்வரை எதிர்த்து கருப்பு கொடி?- நடுரோட்டில் கட்டி உருண்ட தொண்டர்கள் - கேரளாவில் பரபரப்பு

x

கேரள மாநிலம் கண்ணூரில் முதல்வருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய 4 பேர், கைது செய்யப்பட்டனர்.

கல்லியாசேரி தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்ட பின், முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது, காங்கிரஸ் இளைஞர்கள் கருப்புக்கொடி காட்ட முயன்றனர். ஆத்திரமடைந்த கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ரமேஷ், அமல் பாபு, அஜித் உள்ளிட்ட ஆகிய நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதோடு, 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்