விடிஞ்சா தெரியும் JDU தலையெழுத்து..! தலை தப்புவாரா நிதீஷ் குமார்..? உச்சகட்ட பாதுகாப்பில் MLAக்கள்... பரபரப்பில் பீகார்

x

பீகார் மாநிலத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், பாஜக-நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.

நிதிஷ்குமார் திடீரென பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பின்னர், காங்கிரஸ், ஆர்ஜேடி, இடதுசாரிகளுடன் இணைந்து புதிய கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணியில் இருந்து அண்மையில் நிதிஷ்குமார் விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து, முதல்வர் நிதிஷ்குமார் அரசு மீது பீகார் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. மொத்தம் 243 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது....


Next Story

மேலும் செய்திகள்