பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் - குவிந்த போலீஸ்.. தமிழக - கர்நாடக எல்லையில் பரபரப்பு

x

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழக, கர்நாடக எல்லையில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த கக்கநல்லா சோதனை சாவடி வழியாக கர்நாடகாவில் இருந்து வரும் ஒவ்வொரு வாகனங்களும் தீவிர தணிக்கை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கடுமையாக கண்காணிக்கப்படுவதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்