சென்ட் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து...வெடித்து சிதறிய ரசாயனங்கள் - 3 பேர் உடல் கருகி பலியான கொடூரம்

x

பெங்களூரு ராமச்சந்திரா குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் சென்ட் தயாரிப்பு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் இருந்த ரசாயனங்கள் வெடித்து சிதறி, தொழிற்சாலை முழுவதும் தீ பற்றி எரிந்தது. ஆலையில் இருந்தவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆலையை விட்டு ஓடினர். எனினும் சிலர் ஆலைக்குள் சிக்கி கொண்டனர். தகவலின்பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், ஆலையில் இருந்த ரசாயனங்கள், சென்ட் பாட்டில்கள், குடோனில் நிறுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவை தீயில் எரிந்து நாசமானது. 5 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்