கேரளாவில் பதுங்கிய அசாம் இளைஞர்.. அதிரடியாக கைது செய்த போலீசார்..

x

அசாமில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை, கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். அசாமின் நெளவ்காவ் பகுதியை சேர்ந்த சைஃபுல் இஸ்லாம் என்பவர், கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னுடன் பணிபுரிந்து வந்த பெண் ஒருவரை கொலை செய்து விட்டு தப்பிய நிலையில், அவரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இதில், சைஃபுல் இஸ்லாம் கேரளாவில் பதுங்கி இருப்பது தெரியவர, அவரை கேரள போலீசார் கைது செய்த நிலையில், அசாம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து சைஃப்பு இஸ்லாமை அவர்களிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்