தோழி வீட்டில் நகை திருடிய நடிகை... ஓஹோ இவங்க தானா அது..? - கோவா டூர்.. அதிர்ந்து போன திரையுலகம்

x

ஆந்திராவின் விசாகப்பட்டினம் தொண்டர்பத்தியை சேர்ந்தவர் பிரசாத் பாபு. முன்னாள் அரசு ஊழியரான இவர், கடந்த 23 ஆம் தேதி தன் வீட்டில் இருந்த ஒரு கிலோ தங்க நகைகளை காணவில்லை எனக்கூறி போலீசில் புகாரளித்தார். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், பிரசாத் பாபுவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றோரின் பட்டியலை சிசிடிவி மூலம் சேகரித்தனர். இதில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பிரசாத் பாபுவின் வீட்டிற்குள் வந்ததாக கூறி 12 பேர் கொண்ட பட்டியலை சேகரித்த போலீசார், அதில் இன்ஸ்டா பிரபலமும், சினிமா நடிகையுமான செளமியா ஷெட்டியின் பெயரும் இருந்தது போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. இந்த செளமியா ஷெட்டி இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் ஆந்திராவில் பிரபலமான நிலையில், அதன் மூலம் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி சினிமா நடிகையாகவும் ஆந்திராவில் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்