ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் - எங்க தெரியுமா?.. வெளியான முக்கிய தகவல்

x

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. நிச்சயதார்த்த விழாவில் ஜனவரி 19-ம் தேதி மும்பையில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் தம்பதிக்கு லண்டனில் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ள ஸ்டோக் பார்க் எஸ்டேட்டில், திருமணம் நடைபெற உள்ளதாகவும்,3 நாட்கள் விழா நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்