டெல்லியில் காற்று மாசுபாட்டால் வந்த வினை..! -பறவை பிரியர்களுக்கு வெளியான நெஞ்சை உறையவைக்கும் தகவல்

x

டெல்லியில் காற்று மாசுபாட்டால் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. காற்று மாசால் மனிதர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் போல் பறவைகளும் ஏற்படுவதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தினந்தோறும் 50 பறவைகள் ஏதாவது பிரச்சனையால் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதாகவும், அவற்றில் சுமார் 10 பறவைகள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு அவதிப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்