அதானி விவகாரம்.. அதிர்வை கிளப்பும் 4 சந்தேகங்கள்

x

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பிரதமர் மோடியுடன் தொடர்புடைய அதானி குழுமம் தங்களது சொந்த பங்குகளில் முதலீடு செய்து இருப்பதாக மூன்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக புகார் கூறியுள்ளார். அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் யாருடையது? இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டினர் ஆதிக்கம் செலுத்துவது எப்படி? என்றும் ராகுல்காந்தி சரமாரி கேள்வி எழுப்பினார். பொருளாதார முறைகேடு என்பது தனிநபர் சார்ந்த பிரச்சினை அல்ல என்றும் ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சினை என காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அதானி விவகாரம் இந்திய பொருளாதாரம் மீதான நம்பகத்தன்மையை பாதிப்பதாகவும் அதானி குழும முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடி விசாரணைக்கு அனுமதிக்காதது ஏன்? எனவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்