சிறுநீர் கழிக்க சென்ற கைதி கைவிலங்குடன் தப்பி ஓட்டம்

x

கேரள போலீசார் அழைத்து வந்த கைதி, கொடைரோடு அருகே தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நகை திருட்டு வழக்கில் கேரள சிறையில் இருந்தார். திருடிய நகைகள் இருக்கும் இடத்தை காட்ட, கேரள போலீசார் அவரை திருச்சிக்கு அழைத்து வந்தனர். அப்போது, வரும் வழியில் கொடைரோடு பகுதியில், சிறுநீர் கழிக்க சென்ற கைதி, கைவிலங்குடன் தப்பி ஓடி விட்டார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்