MP பதவி ஏற்க ஜாமின் கோரி மனு.. என்ன சொல்ல போகிறது சிறப்பு நீதிமன்றம்

x

மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் பதவி ஏற்க வேண்டியுள்ளது. மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் வகையில் தனக்கு பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதிவரை இடைக்கால ஜாமீன் வழங்க கோரி, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்