பதவி உயர்வு அளித்து அரசாணை - சந்தோஷத்தில் அமைச்சருக்கு முத்தமிட்ட காவலர்

x

புதுச்சேரியில் பதவி உயர்வு பெற்ற ஐஆர்பிஎன் காவலர்கள், உள்துறை அமைச்சருக்கு மாலை அணிவித்து, தோளில் தூக்கி கொண்டாடினர். புதுச்சேரியில் 10 முதல் 20 வருடங்கள் பணியாற்றிய ஐஆர்பிஎன் காவலர்களுக்கு, பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐஆர்பிஎன் காவலர்கள், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை, அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது ஒரு காவலர் உற்சாக மிகுதியில், அமைச்சர் நமச்சிவாயத்தின் கன்னத்தில் முத்தமிட்டார் . தொடர்ந்து, அமைச்சருக்கு மாலை அணிவித்த காவலர்கள், அவரை தோளில் தூக்கி கொண்டாடினர்


Next Story

மேலும் செய்திகள்