ஜீப் கவிழ்ந்து விபத்து9 பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு

x

Vஜீப் கவிழ்ந்து விபத்து9 பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு


கேரளாவில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் 9 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம், வயநாட்டில் தனியார் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் 13 பெண் தொழிலாளர்கள், வேலை முடிந்து ஜீப்பில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மானந்தவாடி சாலை அருகே வளைவில் திரும்பும்போது, ஜீப் 25 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அங்கு வந்த காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மானந்தவாடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். ஓட்டுனர் உள்பட 5 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் சித்ரா, சாந்தா ஆகிய இருவரும் மலையகத் தமிழர் எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனயில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்