76-வது சுதந்திர தினத்திற்கு பிரம்மாண்டமாக தயாராகும் இந்தியா.!-டெல்லியில் ஆயுதப்படை காவலர்கள் பங்கேற்பு!

x

டெல்லியில் சுதந்திர தின விழாவையொட்டி, ஆயுதப் படை காவலர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. நாட்டின் 76-வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், டெல்லி செங்கோட்டையில், ஆயுதப்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த காவலர்கள் பங்கேற்ற அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்