விடுமுறையை கொண்டாடிய 7 நண்பர்கள் - 3 பேர் சடலமானதால் உச்சகட்ட சோகம்

x

விடுமுறையை கொண்டாடிய 7 நண்பர்கள் - 3 பேர் சடலமானதால் உச்சகட்ட சோகம்

கேரள மாநிலம் கோட்டயத்தில் மூவாட்டுபுழா ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரளா மாநிலம் ஆரியங்காவு பகுதியை சேர்ந்த 7 பேர், வைக்கம் வெள்ளூர் பாலத்திம் அருகே மூவாட்டுபுழா ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது, ஆழம் தெரியாமல் ஜிஸ்மோல் என்பவர் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்றுவதற்காக சென்ற அலோஷி மற்றும் ஜான்சன் ஆகியோரும் நீரில் மூழ்கினார். மற்ற 4 பேரும் பத்திரமாக கரை ஏறினர். தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், 2 மணி நேரம் தேடி, 3 பேரின் உடல்களையும் மீட்டனர். விடுமுறையை கொண்டாடுவதற்காக சென்ற இடத்தில் 3 பேர் உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்