ஆறு மாநிலங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

x

ஆறு மாநிலங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ. சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன..

பெங்களூரு சிறைச்சாலையில், தடை செய்யப்பட்ட 'லஸ்கர் இ தொய்பா' இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்த வழக்கில், அதன் விசாரணைகளின் வரம்பை விரிவுபடுத்தும் வகையில், தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று, கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பல இடங்களில் சோதனை நடத்தியது. இதில் பல்வேறு நாடுகளின் கரன்சி நோட்டுகள் தவிர, 25 செல்போன்கள், 6 மடிக்கணினிகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தொடர்ந்து என்.ஐ.ஏ. விசாரணை தீவிரப்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்