538 கோடி ரூபாய் அபேஸ் - பிரபல விமான நிறுவனர் கைது

x

கனரா வங்கியில் 538 கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், ஜெட் ஏர்வேஸ் நிறுவர் நரேஷ் கோயலை அமலாக்கத் துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.

தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த 2019-ஆம் ஆண்டு செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தியது. இதையடுத்து, அந்த நிறுவனம் 538 கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு ஏமாற்றி விட்டதாக கனரா வங்கி புகார் அளித்தது. அதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த சிபிஐ, மும்பையில் உள்ள நரேஷ் கோயலுக்குச் சொந்தமான வீடு மற்றும் இடங்களில் கடந்த மே மாதம் சோதனை நடத்தியது. இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, நரேஷ் கோயலுக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று நரேஷ் கோயல் விசாரணைக்கு ஆஜரானார். நீண்ட நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். கருப்பு பண மோசடி குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நரேஷ் கோயல் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.




Next Story

மேலும் செய்திகள்