புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரூ.500 | pongal gift | puducherry

x

புதுச்சேரியில் பொங்கல் சிறப்புத் தொகுப்புக்குப் பதில், 500 ரூபாய் வழங்குவதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்த‌ர‌ராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புக்குப் பதில், கடந்த 4 ஆண்டுகளாக பணம் செலுத்தப்பட்டு வந்த‌து. அதே போன்று இந்த ஆண்டும், 500 ரூபாய் வழங்குவதற்காக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் கௌரவ குடும்ப அட்டைதார‌ர்கள் அல்லாத 3 லட்சத்து 38 ஆயிரத்து 761 குடும்ப அட்டைதார‌ர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்