சுரங்கத்தில் தவிக்கும் 41 உயிர்களுக்கு பாதி உயிரை திருப்பி கொடுத்த மீட்புக்குழு - நெகிழ்ச்சி செயல்

x

உத்தரகாண்ட் சுரங்க பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு, தொலைபேசி வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது..

உத்தரகாண்ட் மாநிலத்தில் சில்க்யாரா - தண்டல்கான் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது, கடந்த 12-ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேசுவதற்காக பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பாக தொலைபேசி வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தினர், விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். துளையிட்டு மீட்கும் கருவியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், செங்குத்தாக துளையிட்டு தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்