அம்பானி தலைக்கு ரூ.400 கோடி விலை.. "துப்பாக்கி ரெடி.." சிக்கிய 2 கொடூரன்கள் -விசாரணையில் பேரதிர்ச்சி

x

400 கோடி ரூபாய் கேட்டு தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 2 பேரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மின்னஞ்சலுக்கு, பணம் கேட்டு கடந்த வாரம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இதையடுத்து, மும்பை மற்றும் வெளிநாட்டில் உள்ள வீட்டிற்கும் இசட் பிளஸ் பா துகாப்பு போடப்பட்டு, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தனது முந்தைய மின்னஞ்சல்களைப் புறக்கணிப்பதால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், 400 கோடி ரூபாய் கொடுக்காவிட்டால், தங்களிடம் மிகச்சிறந்த துப்பாக்கி சுடுபவர்கள் இருப்பதாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய மும்பை காவல்துறையினர், தெலுங்கானவை சேர்ந்த கணேஷ் ரமேஷ் வன்பர்தி என்ற 19 வயது இளைஞரை கைது செய்தனர். அவரை 8ஆம் தேதி வரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதேபோன்று, குஜராத் மாநிலம் காந்திநகரை சேர்ந்த 21 வயது பட்டதாரி இளைஞரையும் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்