4 பேர் பலி.. 19 பேர் மாயம்.. அமர்நாத் யாத்திரை திடீர் நிறுத்தம்

x

உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 19 பேர் மாயமாகினர்

vovt

உத்தரகண்ட் மாநிலத்தில் கேதார்நாத் செல்லும் வழியில் கௌரிகுண்ட் என்ற இடத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், உணவகங்களும், கடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் உயிரிழந்தனர். 19 பேரை காணவில்லை. அவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து, கேதார்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்படிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 4-ஆவது ஆண்டு தினத்தை ஒட்டி, பயங்கரவாத தாக்குதல் நிகழக்கூடும் என்பதால் அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்