வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் இருந்து 4 மனித உடல்கள் மீட்பு...

x

இமாச்சலப் பிரதேசம் குல்லு மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் சிதைவுகளில் இருந்து 4 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. குல்லு மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் பயணிகளுடன் சென்ற பேருந்து அடித்துச் செல்லப்பட்டது. தற்போது வெள்ளம் வடிந்துள்ளதால் உருக்குலைந்து காணப்படும் பேருந்தின் சிதைவுகளை கண்டுபிடித்தனர். அவற்றில் இருந்து 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலரது உடல்கள் கிடைக்காத‌தால், போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்