4 கேப்சூல்..உள்ள திறந்து பாத்தா..அதிகாரிகளை பதறவிட்ட சம்பவம்..கேரள விமானநிலையத்தில் பரபரப்பு

x

கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தோஹாவில் இருந்து வந்த சவுகத் அலி என்ற பயணி, தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி 4 கேப்சூல்களில் அடைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஆயிரத்து 45 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்