3 வயது சிறுமியை கடித்த சிங்கவால் குரங்கு... கடைசியில் பழத்தால் நடந்த ட்விஸ்ட்
கேரள மாநிலம் இடுக்கி கஞ்சிக்குழியில் வனத்தில் இருந்து வெளியேறி 3 வயது குழந்தையைத் தாக்கிய சிங்கவால் குரங்கு பிடிபட்டது... வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை சிங்கவால் குரங்கு ஒன்று தாக்கிக் கடித்த நிலையில், சிறுமி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்... குரங்கை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்த நிலையில், கூண்டில் இருந்த பழங்களை சாப்பிட வந்த போது சிங்கவால் குரங்கு வசமாக சிக்கியது... இந்நிலையில், சிங்கவால் குரங்கை மருத்துவ பரிசோதனை செய்த பிறகு எங்கு விடுவது என வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.
Next Story