டிரக்கில் கடத்தப்பட்ட 2,400 கிலோ கஞ்சா - கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

x

டிரக்கில் கடத்தப்பட்ட 2,400 கிலோ கஞ்சா - கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

அசாம் மாநில எல்லையில் டிரக்கில் கடத்தப்பட்ட 2 ஆயிரத்து 400 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வடமாநிலங்களில் கஞ்சா தடுப்பு நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அசாம் - திரிபுரா மாநில எல்லையில் இருக்கும் சுரைபாரி சுங்கச்சாவடிக்கு வந்த டிரக்கை வழிமறித்த போலீசார் சோதனையிட்டனர்.

அதில் அதிகளவில் கஞ்சா கடத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து கஞ்சா கடத்திய இருவரை கைது செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்