கல்வான் பள்ளத்தாக்கு மோதல்..உண்மையை மறைக்கிறதா சீனா? - வெளியான அதிர்ச்சி தகவல்

கல்வான் பள்ளத்தாக்கில் சீன தரப்பில் 41 வீரர்கள் உயிரிழந்ததாக ஆய்வு ஒன்றில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
x
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 15ம் தேதி, லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தனர். ஆனால் தங்கள் தரப்பில் முதலில் மரணம் ஏதுவும் ஏற்படவில்லை என மறுப்பு தெரிவித்து வந்த சீனா, பின்னர் இந்த மோதலில் 4 சீன வீரர்கள் மட்டும் உயிரிழந்ததாக அறிவித்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் ஆற்றில் குதித்து தப்பி செல்ல முயன்ற போது, 38 சீன வீரர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே இது போன்று இதற்கு முன்னர் ரஷ்ய செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவில் கல்வான் மோதலில் 45 சீன வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவித்திருந்தது. ஆனால் தங்கள் தரப்பில் 40க்கு மேற்பட்ட உயிரிழப்புகள் நேர்ந்ததாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொய் என அப்போது சீனா மறுத்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்