6 பேரின் ஒமிக்ரான் பரிசோதனை'நெகட்டிவ்'

வெளிநாட்டில் இருந்து இதுவரை தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 6 பேரின் டேக்பாத் பரிசோதனை நெகட்டிவ் என வந்துள்ளது.
x
வெளிநாட்டில் இருந்து இதுவரை தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 6 பேரின் டேக்பாத் பரிசோதனை நெகட்டிவ் என வந்துள்ளது.இதுவரை தமிழகத்திற்கு  அதிக கொரோனா பாதிப்பு கொண்ட 12 நாடுகளில் இருந்து 28 விமானங்கள் வந்துள்ளன.மற்ற நாடுகளில் இருந்து 142 விமானங்கள் என மொத்தம் 170 விமானங்கள் தமிழகத்தில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்களுக்கு வந்துள்ளன.இதில் 7 பேருக்கு கொரனோ தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில்,முதற்கட்டமாக ஒமிக்ரான் தொற்றை கண்டறியும் டேக் பாத் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 6 பேருக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.இதன் மூலம் இவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் இவர்கள் அடுத்தக்கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள்

Next Story

மேலும் செய்திகள்