குடும்பத் தகராறில் நடந்த விபரீதம் : விஷம் கலந்த உணவை சாப்பிட்ட மகள் பலி.. ஆபத்தான நிலையில் போராடும் மனைவி

ஒசூர் அருகே குடும்ப தகராறு காரணமாக விஷம் கலந்த உணவை சாப்பிட்ட மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடும்பத் தகராறில் நடந்த விபரீதம் : விஷம் கலந்த உணவை சாப்பிட்ட மகள் பலி.. ஆபத்தான நிலையில் போராடும் மனைவி
x
குடும்பத் தகராறில் நடந்த விபரீதம் : விஷம் கலந்த உணவை சாப்பிட்ட மகள் பலி.. ஆபத்தான நிலையில் போராடும் மனைவி  

ஒசூர் அருகே குடும்ப தகராறு காரணமாக விஷம் கலந்த உணவை சாப்பிட்ட மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஓசூர் அருகேயுள்ள புக்கசாகரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. கூலித்தொழிலாளியான இவர் தினமும் மதுகுடித்து விட்டு வீட்டில் வந்து சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி லட்சுமி, கறி குழம்பில் விஷம் கலந்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். பின்னர் அவரும், 9 வயதான மகள் மதுமித்ராவும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டுள்ளனர். இதில் மகள் உயிரிழந்த நிலையில் லட்சுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்