வலுவான அரசியல் தலைமை இன்றி 100 கோடி தடுப்பூசிகளை செலுத்துவத் சாத்தியமில்லை - உலக சுகாதார அமைப்பு பாராட்டு

வலுவான அரசியல் தலைமை இன்றி 100 கோடி தடுப்பூசிகளை செலுத்துவத் சாத்தியமில்லை என்று உலக சுகாதார அமைப்பு இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
வலுவான அரசியல் தலைமை இன்றி 100 கோடி தடுப்பூசிகளை செலுத்துவத் சாத்தியமில்லை - உலக சுகாதார அமைப்பு பாராட்டு
x
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது.

இந்நிலையில், "100 கோடி தடுப்பூசியை செலுத்தி மற்றொரு மைல் கல்லை எட்டியுள்ள இந்தியாவிற்கு மிகப்பெரிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக" உலக சுகாதார அமைப்பின் தெற்காசிய இயக்குனர் பூனம் கெட்ராபால் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வலுவான அரசியல் தலைமை, முன்கள சக்திகளின் தொடர் முயற்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின்றி, குறைந்த காலகட்டத்தில் இத்தகைய அசாதாரணமான சாதனை சாத்தியமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்காக்கும் தடுப்பூசிகளை உறுதி செய்வதற்கான முயற்சி மற்றும் நாட்டின் போற்றுதலுக்குரிய உறுதியாக இந்தியாவில் இந்த முன்னேற்றத்தைப் பார்க்க வேண்டும் என்று  பூனம் கெட்ராபால் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்