பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் - மருத்துவ காப்பீடு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் சுகாதார பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் - மருத்துவ காப்பீடு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
x
கொரோனா நோயாளிகளை கையாளும் பணியில் இருக்கும் செவிலியர்கள் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு 50 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இந்த மருத்துவ காப்பீடு கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் மேலும் 6 மாதங்களுக்கு மருத்துவ காப்பீடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் கூடுதலாக மருத்துவ காப்பீடு 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1351 பேருக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்