ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஷெர்லின் சோப்ரா புகார்: ரூ. 50 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்

50 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு எதிராக ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மான நஷ்ட வழக்கை தொடர்ந்து உள்ளனர்.
ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஷெர்லின் சோப்ரா புகார்: ரூ. 50 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்
x
ஆபாசப் படங்களை தயாரித்து செல்போன் செயலியில் வெளியிட்ட விவகாரத்தில் சிக்கிய நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மீது பிரபல நடிகை ஷெர்லின் சோப்ரா பாலியல் புகாரை கொடுத்துள்ளார்.

ஆபாசப் படங்களை தயாரித்து செல்போன் செயலியில் வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா செப்டம்பர் 21 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். 

இவ்வழக்கில் பிரபல நடிகை ஷெர்லின் சோப்ராவிடமும் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில் ராஜ்குந்த்ராவுக்கு எதிராக சமீபத்தில் மும்பை போலீசில் ஷெர்லின் சோப்ரா பாலியல் தொல்லை புகாரை கொடுத்தார். 

ஷில்பா ஷெட்டியும், ராஜ் குந்த்ராவும் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும், ஏமாற்றியதாகவும் புகார் கூறியிருந்தார். 

இதற்கு ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷெர்லின் சோப்ராவின் குற்றச்சாட்டில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்றும், அவை முற்றிலும் பொய்யானது என்றும், அடிப்படை ஆதாரமற்றது எனவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஷில்பா ஷெட்டியும், அவரது ராஜ்குந்த்ராவும் ஷெர்லின் சோப்ராவுக்கு எதிராக மான நஷ்ட வழக்கை தொடர்ந்துள்ளனர். தங்கள் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் மூலம் ஷெர்லின் சோப்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கும் அவர்கள், ஷெர்லின் சோப்ரா மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் 50 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்