தசரா விழாவில் இரு பிரிவினரிடையே மோதல் - தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள வெங்கண்ணபாலம் கிராமத்தில் நடைபெற்ற தசரா விழாவில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
தசரா விழாவில் இரு பிரிவினரிடையே மோதல் - தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்
x
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள வெங்கண்ணபாலம் கிராமத்தில் நடைபெற்ற தசரா விழாவில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விழாவில் அதே தொகுதியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதன்லால் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி சென்றார். அதற்குள் தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர் ராம் நாயக் கோவிலுக்கு வர, இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதை தடுத்து நிறுத்த வந்த காவலர் மீது தாக்குதல் நடத்தியதால் போலீசார் தடியடி நடத்தி இரு பிரிவினரையும் விரட்டியடித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்