"நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை" - என்எல்சி நிறுவனம் அறிவிப்பு

தட்டுப்பாட்டை போக்கும் வகையில் நிலக்கரி உற்பத்தியை 2 கோடி டன்னாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை - என்எல்சி  நிறுவனம் அறிவிப்பு
x
நாட்டின் நிலக்கரி பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக என்எல்சி இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு தனது நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக  நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 40 டன்னாக இருக்கும் நிலக்கரி உற்பத்தியை 2 கோடி டன்னாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி தூத்துக்குடியில் உள்ள என்எல்சி தமிழ்நாடு மின் நிறுவனத்துக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்