"விளம்பரத்திற்காக ஆர்யன் கான் கைது" - மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் குற்றச்சாட்டு

போதை பொருள் தடுப்பு பிரிவினர், தங்கள் விளம்பரத்திற்காகவே ஆர்யன் கானை கைது செய்துள்ளதாக மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.
விளம்பரத்திற்காக ஆர்யன் கான் கைது - மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் குற்றச்சாட்டு
x
 சொகுசு காப்பலில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் நடத்திய சோதனை குறித்து நவாப் மாலிக் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். இந்நிலையில், மகாராஷ்டிரா அரசுக்கும் மற்றும் திரைத்துறைக்கும் அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், வழக்குகளில் சிக்கியவர்களை மிரட்டி, அதிகாரிகள் பணம் பறித்த‌து தொடர்பான ஆதராங்களை வெளியிட உள்ளதாகவும் நவாப்மாலிக் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்