மதுபோதையில் விபத்தில் சிக்கிய இளைஞர்: காப்பாற்ற வந்த மருத்துவர்களுக்கு அடி-உதை

சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்களை தாக்கி மண்டையை உடைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மதுபோதையில் விபத்தில் சிக்கிய இளைஞர்: காப்பாற்ற வந்த மருத்துவர்களுக்கு அடி-உதை
x
புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விசாகன். இவர் குடி போதையில் உப்பளம் பகுதியில் இருசக்கரவாகனத்தில் வந்தபோது, எதிரே வந்த கார் மீது மோதி கீழே விழுந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற அரசு மருத்துவர்கள் விசாகனுக்கு சிகிச்சை அளிக்க முயன்ற நிலையில், போதையில் இருந்த விசாகன் மருத்துவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விசாகனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். கைதாகியுள்ள விசாகன் கடந்த சில மாதங்களுக்கு முன் காவலர்களான பாண்டியன் மற்றும் மலர்வாண‌ன் ஆகியோரை கடற்கரையில் வைத்து தாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்