"இந்தியாவை இந்து நாடாக அறிவியுங்கள்" - பிரதமர் மோடிக்கு பிரபல சாமியார் எச்சரிக்கை
வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என பிரபல சாமியாரான ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா மகாராஜ், பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.
அயோத்தியாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்து நாடாக அறிவிக்காவிட்டால், சரயு நதியில் ஜல சமாதி அடையப்போவதாக குறிப்பிட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியின் தபஸ்வீ மடத்தின் சாமியாராக இருக்கும், ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா மகாராஜ் கடந்த 3 வருடங்களுக்கு முன் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Next Story