"இந்தியாவை இந்து நாடாக அறிவியுங்கள்" - பிரதமர் மோடிக்கு பிரபல சாமியார் எச்சரிக்கை

வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என பிரபல சாமியாரான ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா மகாராஜ், பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவை இந்து நாடாக அறிவியுங்கள் - பிரதமர் மோடிக்கு பிரபல சாமியார் எச்சரிக்கை
x
 அயோத்தியாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்து நாடாக அறிவிக்காவிட்டால், சரயு நதியில் ஜல சமாதி அடையப்போவதாக குறிப்பிட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியின் தபஸ்வீ மடத்தின் சாமியாராக  இருக்கும், ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா மகாராஜ் கடந்த 3 வருடங்களுக்கு முன் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்