தலைவர் பதவியிலிருந்து சித்து ராஜினாமா - பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்திருப்பது, பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
பஞ்சாப்பில் அடுத்தாண்டு சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக சித்து பொறுப்பேற்றார். அமரிந்தர் சிங் எதிர்ப்பையும் மீறி சித்துக்கு பதவி வழங்கப்பட்டதை அடுத்து, இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டது, இந்நிலையில், பஞ்சாப் மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து அமரிந்தர் சிங் ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து, சித்து தலைமையில் சட்டப்பேரவை தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், தொடர்ந்து காங்கிரஸில் இருந்து பணி புரிய விரும்புவதாக சோனியா காந்திக்கு சித்து கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையே, டெல்லியில் வைத்து பாஜகவில் முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் அமரிந்தர் சிங் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்