3 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள்... போதை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது

3 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள்... போதை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது
3 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள்... போதை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது
x
3 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள்... போதை பொருட்கள் வைத்திருந்த 3 பேர் கைது

பீகார் மாநிலத்திலுள்ள கயாவில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை வைத்திருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். போதை மருந்து நெட்வொர்க்கை விசாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு பெரிய அளவிலான போதை பொருள் விநியோகம் நடைபெற உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி ரோந்து பணியை மேற்கொண்ட போலீசார், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் வைத்திருந்ததால் அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த இரண்டரை கிலோ போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்