வளர்ப்பு பிராணிகளை வழங்க புதிய திட்டம்: கேரள அமைச்சர் தகவல்
கேரளாவில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள வளர்ப்பு பிராணிகளை அரசு அருங்காட்சியகத்தில் கொடுக்கும் வகையில் திட்டம் வகுக்கப்படுவதாக, அம்மாநில அமைச்சர் சிஞ்சுரணி தெரிவித்தார்.
இது குறித்து திருவனந்தபுரத்தில் பேசிய அவர், விலங்குகளை காசு கொடுத்து வாங்குவதற்கு பதில், பொதுமக்கள் மீதமுள்ள வளர்ப்பு பிராணிகளை அரசு அருங்காட்சியகத்தில் கொடுத்து விட்டு, வேறு பிராணிகளை வாங்கும் வகையில் திட்டம் தொடங்க இருப்பதாக தெரிவித்தார். மேலும், கொரோனாவின் தீவிரம் குறைவதால் அருங்காட்சியகம் மற்றும் உயிரியல் பூங்கா விரைவில் திறக்கப்படும் என, தெரிவித்தார்.
Next Story