தற்கொலை முயற்சியில் உயிரிழந்த காதலன்.. தற்கொலைக்கு முன்பாக வீடியோ.. தற்கொலைக்கு விருப்பமில்லாத காதலி

தற்கொலை முயற்சியில் உயிரிழந்த காதலன்.. தற்கொலைக்கு முன்பாக வீடியோ.. தற்கொலைக்கு விருப்பமில்லாத காதலி
தற்கொலை முயற்சியில் உயிரிழந்த காதலன்.. தற்கொலைக்கு முன்பாக வீடியோ.. தற்கொலைக்கு விருப்பமில்லாத காதலி
x
தற்கொலை முயற்சியில் உயிரிழந்த காதலன்.. தற்கொலைக்கு முன்பாக வீடியோ.. தற்கொலைக்கு விருப்பமில்லாத காதலி 


 கேரளாவில் தற்கொலை முடிவெடுத்த காதல் ஜோடிகள் மலை மீது இருந்து கீழே குதித்ததில் காதலன் உயிரிழந்தார். ஆனால் உயிர் பிழைத்த காதலியின் வாக்குமூலம் போலீசாரை அதிர வைத்திருக்கிறது... இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்...

தற்கொலை முடிவெடுக்கும் இந்த காட்சியில் காதலி உயிரிழந்து போக, காதலன் மரக்கிளையில் தொங்கி உயிர் பிழைப்பார். ஆனால் இதைப் போன்ற ஒரு சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருக்கிறது. ஆனால் இதில் காதலன் உயிரிழந்து போக, உயிர் பிழைத்த காதலி சிகிச்சையில் இருக்கிறார்.கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள மரயூர் பகுதியை சேர்ந்தவர் நிகிலா. ஆசிரியையாக வேலை பார்தது வருகிறார். இவர் பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த நாதிர்ஷா என்பவரை காதலித்து வந்துள்ளனர்.இவர்களின் காதலுக்கு இரு தரப்பும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் காதல் ஜோடிகள் 2 பேரும் தற்கொலை செய்து  கொள்ள முடிவெடுத்துள்ளனர். பின்னர் மரயூர் பகுதியில் உள்ள மலைப்பகுதிக்கு இருவரும் காரில் வந்துள்ளனர்.மலை உச்சியில் உள்ள பாறையில் இருந்து கீழே குதித்து தற்கொலை கொள்ள வேண்டும் என திட்டமிட்டு கடந்த வியாழக்கிழமை வந்துள்ளனர். அப்போது காரின் உள்ளே இருந்த படி தற்கொலை முடிவு குறித்து வீடியோ ஒன்றை எடுத்துள்ளனர்.ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தற்கொலை முடிவிற்கு உடன்படாத நிகிலா, காதலன் எடுத்த வீடியோவை அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். அதேநேரம் அந்த வீடியோவில் நிகிலாவின் உடல்மொழியும் அதை உறுதி  செய்கிறது.பாறையில் இருந்து குதிப்பதற்கு முன்பாக கை நரம்புகளை துண்டித்துக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார் நாதிர்ஷா. இதற்கு நிகிலா உடன்படாத நிலையில் வலுக்கட்டாயமாக நிகிலாவின் கையை நாதிர்ஷா அறுக்க முயன்றுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தன் கை நரம்பை துண்டித்துக் கொண்டு நாதிர்ஷா பாறையில் இருந்து குதித்து உயிரை விட்டுள்ளார்.கையில் காயங்களுடன் தப்பிய நிகிலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தற்கொலையில் தனக்கு விருப்பமில்லை என்றும் தன் காதலன் தன்னை கொல்ல முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.தற்கொலைக்கு முன்பாக நகைகளை எல்லாம் காரில் வைத்து விட்டு வருமாறு நாதிர்ஷா தன்னிடம் சொன்னதாகவும் கூறியிருக்கிறார் நிகிலா. இவரின் வாக்குமூலம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நாதிர்ஷாவின் மரணம் தற்கொலை தானா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.உயிரிழந்த காதலனின் சடலத்தை கைப்பற்றிய  போலீசார் நிகிலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்