கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு: பயணச் சீட்டு, மதுபாட்டில் மூலம் விசாரணை

கர்நாடகாவில் கல்லூரி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில், போலீஸார் நடத்திய துல்லிய விசாரணை சிலிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு: பயணச் சீட்டு, மதுபாட்டில் மூலம் விசாரணை
x
மைசூரு அருகே கடந்த 24ஆம் தேதி  முதுகலை பட்டதாரி பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது ஆண் நண்பர் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த விவகாரம் குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போலீசார், தமிழக முத்திரையுள்ள மதுபாட்டில் மற்றும் பேருந்து பயணச் சீட்டை கைப்பற்றினர். மேலும், பெண்ணின் போனில் இருந்த ஆடியோ பதிவில், பலாத்கார கும்பல் தமிழில் பேசியதும் பதிவானது. பயணச் சீட்டு மூலம் தமிழகத்தின் தாளவாடி முதல், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வரை போலீசார் சலித்து எடுத்தனர்.  கடந்த வெள்ளிக் கிழமை, தமிழக பகுதியில், குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ், திடீரென சுற்றி வளைத்து சிறுவன் உள்ளிட்ட 5 பேரை பிடித்தனர். விசாரணையில், கூலித் தொழிலாளிகளான அவர்கள், அடிக்கடி மைசூர் பயணிப்பது தெரியவந்தது. அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில்,10 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வெறும் செல்போன் ஆடியோ, பேருந்து பயணச் சீட்டு,  மது பாட்டில் மூலம் போலீசார் நடத்திய விசாரணை, பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்