சரக்கு வாகனத்தின் பின்கதவு சரிந்து விபத்து : 4 பேர் உயிரிழப்பு - 2 பேர் படுகாயம்

ஆந்திராவில் சரக்கு வாகனத்தில் பின்பக்க கதவு சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
சரக்கு வாகனத்தின் பின்கதவு சரிந்து விபத்து : 4 பேர் உயிரிழப்பு - 2 பேர் படுகாயம்
x
ஆந்திராவில் சரக்கு வாகனத்தில் பின்பக்க கதவு சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். பிரகாசம் மாவட்டம், சோமேபல்லில் நடைபெறவிருந்த திருமணத்திற்காக, மணமகளை அழைத்துக்கொண்டு உறவினர்கள் 16 பயணித்துள்ளனர். சரக்கு வாகனத்தில் பயணித்தவர்களில், வாகனத்தின் பின்பக்க கதவில் அமர்ந்தபடி 6 பேர் பயணித்துள்ளனர். இதனிடையே, வேன் வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில், சிறு பள்ளத்தில் இறங்கி ஏறியதில், பாரம் தாங்காமல் பின்கதவு சரிந்துள்ளது. இதில், 6 பேரும் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைய, 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்வம், திருமண வீட்டாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், திருமணமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்