ஹிமாச்சலப் பிரதேசத்தில் பயங்கர நிலச்சரிவு - 13 பேர் பத்திரமாக மீட்பு

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்து உள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் பயங்கர நிலச்சரிவு - 13 பேர் பத்திரமாக மீட்பு
x
ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், மலை உச்சியில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்து பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் மண்ணில் புதைந்தன. பேருந்து பயணிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படும் சூழலில், இதுவரை அங்கிருந்து 13 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். 13 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே, நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு,  2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்