கேரளாவில் நாடார் இட ஒதுக்கீடு விவகாரம் - டிவிஷன் பெஞ்ச் அறிவிப்பு

கேரளாவில் நாடார் இட ஒதுக்கீடு விவகாரம் - டிவிஷன் பெஞ்ச் அறிவிப்பு
கேரளாவில் நாடார் இட ஒதுக்கீடு விவகாரம் - டிவிஷன் பெஞ்ச் அறிவிப்பு
x
கேரளாவில் நாடார் இட ஒதுக்கீடு விவகாரம் - டிவிஷன் பெஞ்ச் அறிவிப்பு

கேரளாவில் நாடார் இடஒதுக்கீடு தொடர்பாக கேரள உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த  உத்தரவுக்கு தடை இல்லை என டிவிஷன் பெஞ்ச் அறிவித்துள்ளது.கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி கேரளாவில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்த்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, குட்டப்பன் அக்‌ஷய் சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசின் உத்தரவுக்கு தடை விதித்தார். அதில், குடியரசு தலைவருக்கு மட்டுமே இதற்கான அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. இந்த தடை உத்தரவுக்கு எதிராக கேரள அரசு, உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச் முன்பாக மனு சமர்ப்பித்த நிலையில், டிவிஷன் பென்ச்சும், தனி நீதிபதி அறிவித்த உத்தரவுக்கு தடையில்லை என அறிவித்துள்ளது. மேலும் இந்த மனு தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில், டிவிஷன் பென்ச் வரும் 25 ஆம் தேதி கேரள அரசின் விரிவான வாத‌த்தை கேட்கவுள்ளது. 




Next Story

மேலும் செய்திகள்