"2022-மூன்றாம் காலாண்டில் சந்திரயான்-3" விண்ணில் ஏவப்படக் கூடும் - மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்

2022-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2022-மூன்றாம் காலாண்டில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக் கூடும் - மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்
x
2022-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும்  மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சந்திரயான்-3 திட்டத்தை மெய்யாக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார். சந்திரயான்-3 திட்டத்தை மெய்யாக்குவதில் கட்டமைப்புப் பணியை இறுதி செய்தல், ஒருங்கிணைப்பு, விண்கல அளவில் விரிவான சோதனை உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் அடங்கியுள்ளன என்றார். இந்தத் திட்டத்திற்கான பணிகள் கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், வீடுகளிலிருந்து செய்யக்கூடிய அனைத்துப் பணிகளும் பொது முடக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்