கால்வாயில் தவறி விழுந்த இளைஞர்- காப்பாற்ற முயன்ற 3 நண்பர்கள் உயிரிழப்பு

ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே கால்வாயில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்ற முயன்ற 3 நண்பர்கள் உயிரிழந்தனர்
x
ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே கால்வாயில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்ற முயன்ற 3 நண்பர்கள் உயிரிழந்தனர்.சென்னையைச் சேர்ந்த லோகேஷ் தனது மனைவி மற்றும் 3 நண்பர்களோடு சித்தூர் அருகே உள்ள உப்பலமடுகு அருவிக்கு சென்றுள்ளார். கொரோனா பரவல் காரணமாக அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படாததால், நண்பர்கள் அனைவரும் அருகில் இருந்த கங்கா கால்வாய் பகுதியை சுற்றிப்பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்துகொண்டனர். அப்போது கால்வாயின் அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற யுவராஜ் என்பவர் கால்வாய்க்குள் தவறி விழுந்தார். இதனையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக மற்ற நண்பர்கள் கால்வாய்க்குள் குதித்துள்ளனர். ஆனால் தவறி விழுந்த யுவராஜ் கால்வாய் ஓரத்தில் இருந்த செடிகளை பிடித்து தப்பித்த நிலையில், காப்பாற்ற முயன்ற மற்ற 3 நண்பர்களும் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதுகுறித்து லோகேஷின் மனைவி தகவல் தெரிவித்ததையடுத்து, அவரது கணவர் உட்பட  2 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவரின் சடலத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்