மேலும் 34 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
x
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்றைய தினம் மேலும் 34 ஆயிரத்து 703 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 6 லட்சத்து 19 ஆயிரத்து 932ஆக அதிகரித்துள்ளது. 
கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 553 பேர் இறந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 3 ஆயிரத்து 281ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 51 ஆயிரத்து 864 பேர் கொரோனாவில்  இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4 லட்சத்து 64 ஆயிரத்து 357 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 35 கோடியே 75 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்