"சாலை விபத்து - ஆண்டுக்கு1.5 லட்சம் பேர் பலி"

நாட்டில் நிகழும் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களில் 60 சதவீத பேர் இருசக்கர வாகன ஓட்டிகள் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சாலை விபத்து - ஆண்டுக்கு1.5 லட்சம் பேர் பலி
x
நாட்டில் நிகழும் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களில் 60 சதவீத பேர் இருசக்கர வாகன ஓட்டிகள் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.வாகன விபத்து ம​ற்​றும் பாதுகாப்பு பற்றிய காணொலி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய நிதின் கட்கரி,இந்தியா மற்றும் இதர வளரும் நாடுகளில் அதிகளவிலான சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது என்றார்
ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் ஒன்றரை லட்சம் பேர் இறப்பதாகவும், இது கொரோனா மரணங்களை விட அதிகம் என சுட்டிக்காட்டினார்.அதிலும், உயிரிழப்பவர்களில் 60 சதவீத பேர் இருசக்கர வாகன ஓட்டிகள் என தெரிவித்த கட்கரி, இருசக்கர வாகன போக்குவரத்து பாதுகாப்பு தான் இப்போதைய தேவை என்றார்.மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் எந்த விபத்து மற்றும் இறப்புகள் ஏற்படாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் தனது நோக்கம் என கூறிய அவர், உலகளவில் வாகன பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் சாலை பொறியியல் தொழில்நுட்பம் மிகப் பெரியளவில் மேம்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அத்துடன், ஓட்டுநர்களுக்கான சிறந்த பயிற்சி, மேம்பட்ட பயிற்சி மையங்கள் ஆகியவை முக்கியம், நல்ல சாலைகளை உருவாக்கி, சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது எனது தார்மீக பொறுப்பு என்றார்,நமது இலக்கை அடைய, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்