நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு
x
நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக 825 ரூபாயாக இருந்த மானிய சிலிண்டர் ஒன்றின் விலை 850 ரூபாயாக அதிகரித்து உள்ளது.

இதேபோல் வர்த்தக பயன்பாடு சிலிண்டர்களின் விலை 84 ரூபாய் உயர்த்தப்பட்டு, ஆயிரத்து 687 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்